தஞ்சையில் மனிதநேய மக்கம் கட்சியினர் 19 பேர் கைது
தஞ்சை நகர மனித நேய மக்கம் கட்சி சார்பில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுக்கடை முன்பு மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி மாவட்ட செயலாளர் கலந்தர் தலைமையில் மனித நேய மக்கம் கட்சியினர் நேற்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நகர செயலாளர் அப்துல்மஜீத், மாவட்ட துணை செயலாளர் அதிரை சாகுல், த.மு.மு.க. மாவட்ட தலைவர் அப்துல்ஜப்பார் உம்பட பலர்கலந்து கொண்டனர். பின்னர் அவர்கம் அங்கிருந்து மதுக்கடை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக புறப்பட்ட போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் மனித நேய மக்கம் கட்சியினர் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 24.02.10 வியாழக்கிழமை அன்று வழுத்தூர் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து பள்ளிவாசல்களில் மௌலீது ஓதுவதை தடை செய்ய மாநிலத் தலைமையிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கொடுத்தனர். இச்சந்திப்பில் மாவட்ட து. செயலாளர் குலாம், கிளைத் தலைவர் கவுஸ் முஹம்மது, கிளைச் செயலாளர் அப்துல் காதர், கிளைப் பொருளாளர் இப்ராஹீம், கிளை து.செயலாளர் ஜாசிம், கிளை உறுப்பினர்கள் இக்பால் மற்றும் நபில் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.